Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி கட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்

மார்ச் 10, 2021 01:00

திருச்சி : மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெட்பாக்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு இந்திய கட்டுனர் சங்க திருச்சி மைய தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்திய கட்டுனர் சங்க தேசிய துணைத் தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு பேசுகையில், கட்டுனர் சங்க நிர்வாகிகள் கரோனா காலத்தை உபயோகமான முறையில் பயன்படுத்தினர்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளி காட்சி மற்றும் ஜூம் மீட்டிங் மூலம் பல பயனுள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இந்த வகையில் திருச்சி மையமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.திருச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி கட்டுனர்களுக்கு மட்டுமின்றி இந்த சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.இந்த ஆண்டுக்கான இந்திய கட்டுனர் சங்கத்தின் அனைத்து மையங்களிலும் நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது சிறப்பம்சமாகும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கட்டுனர் சங்க திருச்சி மைய துணை தலைவர் ஜோதி ராமலிங்கம், திருச்சி என்.எம்.கமால் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தாஜுதீன் அகமது மற்றும் ஏராளமான கட்டுனர்கள், கட்டுமான பொறியாளர்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்திய கட்டுனர் சங்க திருச்சி மைய செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.இந்த கூட்டத்தில் திருச்சி பிரைட் மார்பிள் மற்றும் கிரானைட் நிறுவன அதிபர் சையத் சாகிப் நவாஸ் மற்றும் லட்சுமி ஃபேபிரிகேஷன் நிறுவன நிர்வாகிகள் தங்களது நிறுவன தயாரிப்புகள் குறித்து விளக்கி பேசினர்.

தலைப்புச்செய்திகள்